Friday, April 15, 2011

உலகில் நான்கு வகையான மனிதர்கள்

உலகில் நான்கு வகையான மனிதர்கள்​தான் இருக்கிறார்கள் என்கிறது அரபு இலக்கியம்.
1. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அவன் முட்டாள். அவனைவிட்டு விலகிவிடு!
2. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். அவன் எளியவன். அவனுக்கு கற்றுக்கொடு!
3. ஒருவனுக்கு எல்லாம் தெரியும். தனக்கு யாவும் தெரியும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியாது. அவன் தூங்குகிறான். அவனை எழுப்பிவிடு!
4. ஒருவனுக்கு எல்லாம் தெரியும். தனக்கு எல்லாம் தெரியும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன்தான் அறிவில் சிறந்தவன். அவனைப் பின்தொடர்ந்து செல்!

No comments:

Post a Comment